No results found

    Money Flow Will Come - மனம் இருந்தால் பணம் வரும்

    மனம் இருந்தால் பணம் வரும் !!

    "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பதுபழமொழி. "எனக்கு பணம் வரும்
    ; நான் கோடீஸ்வரன் ஆவேன்" என்று நினைத்தாலேபணம் வந்து விடும். இன்றைய உளவியல் வல்லுனர்கள் இதையே கூறுகின்றனர் !அபரிமிதமான அளவிட முடியாத செல்வம் உன்னிடம் இருப்பதாக நினைத்தாலே போதும் பணம்தன்னால் வந்து சேரும். CONNECT YOUR SELF WITH THE ABUNDANCE OF THE UNIVERSE.பிரபஞ்சத்தின் செல்வ சக்தியுடன் உன்னை நீ சேர்த்துக் கொள் என்றுஉளவியல். வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் நினைத்தாலே நல்லது நடக்கும்இதுதான் பிரபஞ்ச விதி.

     முதலில் உங்களுக்கு எவ்வளவு செல்வம் தேவை என்றும்செய்து கொள்ளுங்கள். இந்த முடிவு முக்கியமானது. இந்த செல்வத்தை அடைய பலவழிகள் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் நினைக்காதீர்கள். அந்த செல்வம்வந்து விட்டால் எப்படி. இருப்பீர்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பதைநினைத்துப் பாருங்கள்.பட்டியலிடுங்கள். இதற்கு ஆக்க பூர்வமானஉருவகப்படுத்தல் (Creative Visualization) என்று பெயர்.

     இன்றைய உளவியல்தான் இதை கூறுகிறதா என்றால் பண்டைய வேதமும் இதைத்தான் கூறுகிறது . ஸ்ரீஸுக்தம் என்று மந்திரத்தில் இது பற்றி குறிப்பிடப்படுகிறது . " எனது மனதில்எழும் மகிழ்ச்சியினாலும் நல் எண்ணங்களினாலும் சத்தியமான வாக்கினாலும் தாயேநீ என்னை வந்தடை வாயாக என்று மகாலஷ்மியை பார்த்து கூறும்படியாக வேதம்அமைந்துள்ளது.

     1 .அபரிதமான பிரபஞ்சத்தின் செல்வ சக்தி என்னிடத்தில்நிறைந்திருக்கிறது என்று நினையுங்கள்.

     2 .மங்களகரமான, மகிழ்ச்சிகரமானவாழ்க்கையை நீங்கள் அடைந்து விட்டதாக நினையுங்கள் .

     தினமும் இந்த சிந்தனைஇருந்தால் வளமான வாழ்வு நம்மை வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை.

     தவ சக்தியை வளர்த்துக் கொள்ள....

    தினமும் நாம் ஸ்மரன் செய்தல் வேண்டும்.

    தினமும் தியானம் செய்தல் வேண்டும்.

    தினமும் ஜபம் செய்தல் வேண்டும்.

    லலிதா ஸஹஸ்ரநாமம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போன்ற மந்திர பூர்வமானவற்றை பாராயணம் செய்தல் அந்த மந்திர தேவதைகளின் அருள் கிடைக்கும்.

    குலதெய்வம், இஷ்டதெய்வம் போன்ற திருத்தளங்களுக்கு சென்று வழிபடுவது.

    Previous Next

    نموذج الاتصال